செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மலேசிய அதிசயம்– கண்ணாடிக் கோவில்

உலகில் கோவில்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது இப்போது துவங்கியதல்ல. அழகர்கோவில், காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட நிறைய கோவில்களில் கண்ணாடி அறைகள் உண்டு. இங்கு சுவாமி எழுந்தருளும்போது நாம் உள்ளே சென்றால், கடவுளுடன் நாமும் பல நூறு இடங்களில் பிரதிபலிப்போம். கடவுள் திரு உருவைச் சுற்றி பல கோணங்களில் பல கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால் நம் உருவம் நூற்றுக்கணக்கில்...

நமது தலைவர்களைப் போற்றுவோம்

துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ்  இவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பிப்ரவரி 8, 1903ஆம் ஆண்டு அலோர் ஸ்டார், கெடா மாநிலத்தில் பிறந்தவர். துங்கு அவர்கள் கெடா மாநிலத்தின் 24ஆவது மன்னரான சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா அவர்களின் புதல்வனாவார். இவரைச் சுதந்திரத் தந்தை என்போம். துங்கு அவர்கள் சட்டத் துறை பயின்றவர். இவர் மலாய்க்காரர்,...

சுதந்திரத் தின வருணனை

மலாயா கூட்டரசின் தலைநகரான கோலாலம்பூரின் சிலாங்கூர் கிளப் திடல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சியளித்தன. மக்கள் கூட்டம் அரங்கில் நிறைந்து காணப்பட்டது. அனைவரின் பார்வையும் இரண்டு கொடி கம்பங்களின் மீதும் அருகே உள்ளே மணிக் கூண்டின் மீதுமே உள்ளது. இன்று மலாயா கூட்டரசு...

மலேசியா பிறந்த கதை

1957ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 1963ஆம் ஆண்டு வரை மலாயாவை, மலாயா கூட்டமைப்பு என்று அழைத்தனர். அதற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மலாக்காவைக் கண்டு பிடித்த பரமேசுவரா காலத்தில் தீபகற்ப மலாயாவை, மலாயா...

ருக்குன் நெகாரா கோட்பாடு

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. மலாயா 1957இல் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர். நாடு நலம்பெறவும் மேலும் வலிமை பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத...

மலேசியர் அடைந்த நன்மைகள்

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்றும் கூட அழைக்கலாம். மலேசியா 1957இல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா தோற்றம் பெற்றதால் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவை பெரும் நன்மைகள் அடைந்தன.    மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர்தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கேச் சிறப்பைக் கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள்,...

தாய் மண்ணைக் காப்போம்

அன்னை மலையகமே! அகிலத்தின் ஓர்துளியே!                ஆழிசூழ் உலகினிலே அழகுமீன் வடிவமொடுஇன்னல் களைந்தே ஈட்டுகின்ற ஆட்சிமுறை                மின்னலின் வேகத்தில் மீட்டுகின்ற முன்னேற்றம்!இன்பத்தின் எல்லையிலே இனம்பாரா ஒற்றுமையும்                இணைந்திருக்கும் மூவினத்தின் எடுப்பான உழைப்புமுறை!துன்பத்தின்...

வாவாசான் பள்ளி

அரசாங்கம் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் வாவாசான் பள்ளி. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள வழியே இது.    மாணவர்களிடையே ஒற்றுமை இருப்பது மிக முக்கியம் என்பதைக் கல்வி அமைச்சு கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, பல்லின மாணவர்களின் பாரம்பரிய பண்பாடுகளை நிலை நாட்டவும் அரசு நாட்டம்...

குடும்பம் ஒரு கோவில்

வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவது குடும்பம். குடும்பம் ஒரு கோவில் என்றனர் நமது முன்னோர். கோவிலைச் சுற்றியே இந்தியச் சமூகம் நெடுங்காலமாக அமைந்து வந்திருக்கிறது. சமூகத்தின் ஆணி வேர் குடும்பம் என்பதால் அது கோவில் என அழைக்கப்படும் தகுதி உடையது. சமுதாயத்தின் அடிப்படையே குடும்பம்தான். பிள்ளைகளுக்கு வீடுதான் முதல் பள்ளிக்கூடம், பெற்றோரே முதல் ஆசான்கள். ஒரு தனி...

நல்லெண்ண விருந்து

மலேசியாவில் பண்டிகையின் போது நல்லெண்ண விருந்து நிகழ்வினை ஆங்காங்கே நடத்துவது பழக்கமாகவிட்டது. குறிப்பாக ஹரிராயா, தீபாவளி, சீனப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் போன்ற மலேசியர்களின் முக்கிய பெருவிழாக்களின் போது ஆங்காங்கே நல்லெண்ணவிருந்து நடைபெற்று வருகிறது. நல்லெண்ண விருந்து என்பது பண்டிகையின் போது மற்ற இனத்தவர்களோடு இணைந்து கொண்டாடப்படும் விருந்துபசரிப்பு ஆகும். இரு பண்டிகைகளை இணைத்தும் நல்லெண்ண விருந்து கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக தீபாராயா (Deeparaya), கிறிஸ்மஸ் புத்தாண்டு...

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நாட்டின்பால் விசுவாசம்

“பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்” என்பது நம் நாடான மலேசியாவின் தேசிய கோட்பாடுகளுள் ஒன்றாகும். இக்கோட்பாடு மலேசிய மக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பால் விசுவாசம் கொள்ள வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஒவ்வோரு நாட்டுக் குடிமக்களும் தத்தம் நாட்டின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்த மறுவினாடியில் இருந்தே அந்நாட்டின் பிரஜை ஆகிறது. குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் வரை ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணின் மீதும் நாட்டின் மீதும் விசுவாசம்...

மலேசிய மக்களின் உண்ணும் முறையை அறிதல்.

உலகநாடுகளுள் மலேசியா தனித்தன்மை வாய்ந்த ஒரு நாடு ஆகும். மலேசியாவின் பல இன மக்கள் உள்ளிட்ட முக்கிய இனமக்களும் தங்களின் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம், சமயம், இலக்கியம் எனச் சொந்த அடையாளங்களோடு வேற்றுமையில் ஒருமைப்பாடு கண்டு வாழ்ந்துவருகின்றனர். மலேசியர்கள் பல்வகை உண்ணும் முறைகளை அனுசரித்து  வருகின்றனர். இவை மலேசியர்களின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. இவை நாம் பெருமைப்படத் தக்கனவாக இருக்கின்றன. உண்ணும் உணவு முறைகளில்  எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும்...

நமது பாரம்பரிய உணவுகள்

 பல்லின மக்களைக் கொண்ட மலேசியா பல்வகை கலாச்சாரம், பண்பாடு மற்றும் உணவுகளையும் தாங்கி வருகிறது. அவ்வகையில், மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும். . லெமாங்  பூலூட் அரிசியால் தாரிக்கப்படும் உணவாகும். மூங்கில் கொண்டு நெருப்பில் வேகவைத்து தயாரிக்கப்படும் லெமாங் வட்டவட்டமாக வெட்டப்பட்டு வாட்டிய மீனுடன் பறிமாறப்படும். கிழக்கு மலேசியாவில் லெமாங் ரெண்டாங்  அல்லது செருண்டிங்குடன்...

நமது உணவின் பூர்வீகம்

பல இன மக்களைக் கொண்ட நம் நாட்டில் பலவகை கலாச்சாரம் கலந்திருந்தாலும். நம் வாழ்க்கையில் கலந்துவிட்ட உணவுகள் பலவகையாக இருந்தாலும் அவற்றிற்கும் பூர்வீகம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வதில் நாம் பெருமையடைய வேண்டும்.லெமாங் மலேசியா, இந்தோனிசியா மற்றும் போர்னியொவின் பூர்வீக உணவுகளில் ஒன்றாகும் பண்டைய காலத்தில் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மக்கள் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். பிறகு நெருப்பை மூட்டி,...

பெருமைக்குரிய மலேசியா

பெருமைக்குரிய மலேசியா நம் தாய் திருநாடு ஆகும். இங்கு நீர் வளமும் நில வளமும் நிறைந்து காணப்படுகிறது. மலேசியா மிதமான சிதோஷ்ணநிலையைக் கொண்ட நாடாகும். இங்கு ஆண்டுதோறும் வெயில் மற்றும் மழை உண்டு.மலேசியா பல்லின மக்களைக் கொண்ட நாடு. இங்கு மிகப் பெரிய மூன்று முக்கிய இனங்களாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் திகழ்கிறார்கள். மேலும் ஈபான், கடசான், மூரூட் போன்ற இனங்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கொப்ப இங்கு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இங்குள்ள...

உன்னால்தான் மலேசியா

மலேசியா பல்லின மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக விளங்கும் அரிய நாடு.எல்லா வகை வளங்களும் நிறைந்த நாடுதான் நம் மலேசியா. தேசிய தினச் சிறப்புச் செய்தியில் " நாட்டின் வலிமைக்கு எல்லோரும் இணைவீர்!" என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவையாகும்.         ...

நமது பெருமைக்குரிய பாரம்பரிய உடைகள்

மலேசியர்கள் பல்வேறு பண்பாட்டை உடையவர்கள் என்பதை அவர்களின் பாரம்பரிய உடைகளின் மூலம் காணலாம். ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். வழிபாட்டு இடங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பாரம்பரிய உடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.    மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை பாஜு குரோங், மற்றும் பாஜு மெலாயு ஆகும். பாஜு குரோங் பெண்களுக்கும் பாஜு மெலாயு ஆண்களுக்கும் உருவாக்கப்பட்ட உடைகளாகும்....

பாரம்பரிய உடைகளின் தனித்தன்மை

மலேசியாவில் பல இன மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வோர் இனத்தவரும் தங்களுக்கெனத் தனிப் பாரம்பரியப் பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரியப் பண்பாட்டு உடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பார்கள்.  ஒவ்வோர் இனத்தவரின் உடையிலும் தனித்தன்மையிலும் பாரம்பரிய வரலாற்றுப் பின்னணியையும் காண முடியும்.மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதால் தங்கள் கலாச்சாரத்தை மற்ற இனத்தவருக்குக் காண்பிக்க முடிகிறது. பண்டிகைகள், விழாக்கள், திருமணம், முதலிய நிகழ்வுகளில் இவ்வுடைகளை அணிந்து...

பண்புடன் பேசுதல்

இவ்வுலகத்தில் மானிடர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் பண்பு உயிரினும் மேலாக கருதப்படுகிறது. பண்பற்றவன் மிருகங்களாகவும் முழுமையற்றவனாகவும் கருதப்படுகிறான். பண்பு என்றால் என்ன? மரியாதைச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல், கனிவுடன் பேசுதல், அடக்கமாக நடந்து கொள்ளுதல், விட்டு கொடுத்து பேசுதல், நடந்து கொள்ளுதல், பெரியவர்களை மதித்தல் போன்றவையாகும்.     “ இனிய உளவாக இன்னாத கூறல்      கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ”.  நன்மை தரும் இனிய சொற்கள்...

நாட்டின் அடையாளம்

ஒவ்வொரு நாட்டையும் அடையாளம் காட்டும் தனித் தன்மைகள் உள்ளன. பொறுப்புள்ள குடிமக்கள் என்ற அடிப்படையில் நாம் நம் நாட்டின் தனித் தன்மைகளைக் காட்டும் எல்லா அடையாளங்களையும் அறிந்திருப்பதுடன் அவற்றின் சிறப்பியல்புகளையும் உணர்ந்திருத்தல் அவசியம். மேலும்,நாட்டு  மக்களின் நல்வாழ்விற்கு அந்த அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.    நம் நாட்டின் முதன்மையான அடையாளம் நாட்டின் தேசியக் கோட்பாடு.தேசியக் கோட்பாட்டில் மலேசியர்களாகிய நாம் நமது முழு சக்தியையும்...

எனது கொடி

கொடி ஒரு தேசிய சின்னமாக,மற்றும் ஒரு நாட்டின் அடையாளமாக உள்ளது.ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் சொந்த நாட்டின் பெருமையையும் உணர்வையும் உருவாக்க அதன் சொந்த கொடி உள்ளது.மாநிலங்களில் தொழிற்சங்கம் மற்றும் மலேசியாவின் தேசிய ஒற்றுமையான அரசாங்கத்தை சித்தரிக்கும் நம் “ஜாலொர் கெமிலாங்” என்று பெயர் சூட்டப்பட்ட மலேசியக் கொடி.. நம் நாட்டின் பெருமைக்கும்,போற்றுதற்கும் உரிய நம் நாட்டுக் கொடி, 1949-இல் தான் முதன் முறையாக வடிவமைக்க நம் நாடு ஆயுத்தமாகியது.பல மேம்பாடுகள் செய்யப்பட்டது.அந்தக் கால்க்...

நேசமிக்க மலேசியா

முப்புறம் கடல் சூழ்ந்து, நாற்புறமும் செம்மையாய்ச் செழிப்புற்று உலக வரைபடத்தில் கடுகளவே தோன்றினாலும், உலகளவில் பிரசித்தி பெற்றது நம் மலேசிய மலைத் திருநாடு. மலேசியா வளர்ந்த மற்றும் வளமான நாடு. மலேசியா பல்வேறு இனங்கள் கொண்ட நாடு. தீவிரவாதம்,அரசியல் நிலைத்தன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை,உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும்...

தொலைபேசி உரையாடலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கம்

மானிடப்பிறப்பெடுத்த நாம் ஒவ்வொருவரும்  நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ள கண்டிப்பாக பிறருடன் தொடர்பு கொள்ள வேண்டும். நாம் பல வகையான ஊடகங்கள் வழி பிறருடன் தொடர்பு கொள்ளலாம். நாம்  இணையத்தின் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம். பிறருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படும் முறைகளுள் மிகவும் பிரபலமான ஒன்று தொலைபேசி உரையாடல். மிக தூரத்தில் உள்ளவரிடமும் அருகில் உள்ளவரிடமும் மிக எளிதான முறையிலும் குறிப்பிட்ட...

புதன், 27 ஆகஸ்ட், 2014

பாரம்பரிய இசைக் கருவிகள்

வீணை வீணை ஒரு நரம்பு இசை கருவி . மிக அழகிய இசைகருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது .இந்திய இசையின் பல நுட்பங்களையும் , தத்துவங்களையும் இந்த கருவியின் மூலம் தெளிவாக வெளிபடுத்தலாம் . பலா மரத்தினால் வீணை செய்யபடுகின்றது . வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும் இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தபடுகின்றன....

மொழியும் வட்டார வழக்கும்

மலாய்காரர்கள் மலேசியாவில் வாழும் மலாய்காரர்களின் பேச்சு மொழியில் , அவர்கள் வாழும் வட்டாரத்திற்கு ஏற்ப உச்சரிப்பிலும் வீருபடுகளை காணலாம். இது நல்ல மொழி உச்சரிப்பில் இருந்து வேறுபட்டிருக்கும். இதனை வட்டார வழக்கு என்பர். இந்த வட்டார வழக்கு மாநிலத்திற்கு ஏற்ப வேறுபட்டிருக்கும். அலை பினாங்கு வழக்கு. , கெட வழக்கு , கிளந்தான் வழக்கு, திரங்கானு வழக்கு , பேராக் வழக்கு , நெகிரி வழக்கு மற்றும் ஜோகூர் வழக்கு . அவரவர் தத்தம் பணியில் இந்த வட்டார வழக்கு மொழிகளை பேசுவர் எடுத்துகாட்டாக கெடா...

உணவு வகைகள்

...

மலேசியரின் பெருநாள்கள்

தீபாவளி அனைத்து இந்துக்களும் கொண்டாடும் பண்டிகை தீபாவளியாகும் . தமிழ் வருடத்தில் , ஐப்பசி மதம் அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படும் . தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பார்கள். தீபவளியன்று அதிகாலை எழுந்து என்னை தேய்த்து குளிப்பார்கள் புத்தாடைகள் அணிந்து பெற்றோரிடம் நல்லாசி பெறுவார்கள் . குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவர்கள். நண்பர்கள் அண்டை அயவர்களையும் வீட்டிற்கு அழைத்து உபசரிப்பார்கள். பெரும்பாலும் சைவ உணவையே வழங்குவார்கள் நம்முள் இருக்கும்...

மாமன்னரையும் ஆட்சியாளரையும் போற்றுவோம்

மலேசிய நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மிக உயரிய தலமைப் பொறுப்பினை வகிப்பவர் மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆவார். மாமன்னரை மலாய் ஆட்சியாளர் பேரவை தேர்வு செய்கிறது. இப்பேரவையில் நெகிரி செம்பிலான் , சிலங்கூர், பெர்லிஸ், திரங்கானு, கெடா , கிளந்தான், பஹான், ஜொகூர், பேராக் ஆகிய ஒன்பது மாநிலங்களின் மலாய் ஆட்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்பேரவைக் கூட்டங்களில்...

மக்களவையும் மேலவையும்

மலேசியா ஒரு வளமான நாடு மட்டும் அல்ல இது ஒரு மக்களாட்சி நாடாகும். மலேசியாவை ஜனநாயக நாடு என்றும் கூறுவர். மக்கள் தங்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுகின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் இத்தேர்தலின் வழி சட்ட மன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தேடுக்கின்றனர். நாடாளுமன்றம் இரண்டு அவைகளாக பிரிக்கப்படுள்ளன. அவை மக்களவை மற்றும் மேலவை ஆகும். மக்களவையும் மேலவையும் சேர்ந்ததுதான் நாடாளுமன்றம்.மக்களவை என்பது பொதுத்தேர்தலில்...

மலேசியாவின் ஆட்சிமுறை அமைப்பு

மாட்சிமை தங்கிய மாமன்னரே நாட்டின் தலைவர் ஆவார். மலேசியாவில்  மொத்தம் ஒன்பது சுல்தான்கள் உள்ளனர். இவர்கள் முறையே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாட்சிமை தங்கிய மாமன்னராக பதவி ஏற்கின்றனர். பொதுத்தேர்தலின் வழி மக்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தைத் தேர்ந்துகின்றனர். மக்கள் பொதுத்தேர்தலின் மூலம் சட்ட மன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தேடுக்கின்றனர். பெரும்பான்மையான வாக்கு கிடைத்தவர்களே அரசாங்கத்தை அமைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மை கட்சி...

பொறுப்புகள்

மாநில ஆட்சி அமைப்பு முறையில் பொறுப்புகள் பல தரப்பினருக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மாநில ஆட்சியாளர் அல்ல சுல்தான்  மாநில தலைவராவார். அவருக்கு உதவும் வகையிலும் மாநிலத்தை நிர்வகிக்கவும் மாநில முதல்வர் (மந்திரி புசார்) தேர்ந்தேடுக்கபடுகிறார். மாநில முஹல்வர் தனக்கு உதவும் வகையில் மாநில ஆட்சிக் குழுவை அமைத்து மாநிலத்தை நிர்வகிக்கிறார்.மாவட்ட அதிகாரி தேர்தலில் தேர்ந்தேடுக்கபடாதவர். இவர் ஒரு அரசாங்க ஊழியர். மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தை நிவகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கபடுகின்றது...

நாட்டு தலைவர்களின் கடமைகள்

...

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பண்பாட்டை பிரதிபலிக்கும் ஆடைகள்

பாஜூ கூரோங் –- பாஜூ மெலாயு. மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்கின்றனர்.ஒவ்வொரு இனத்தவரும் தங்களின் பாரம்பரிய உடைகளை தங்கள் இனத்தின் அடையாளச் சின்னமாக வைத்துள்ளனர்.பாஜூ குரோங் மற்றும் பாஜூ மெலாயு மலாய் இனத்தவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் இவ்வகை ஆடைகளை வேலை இடங்களுக்கும் அணிந்து செல்கின்றனர்.இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும்,சமய...

பிறரின் பாரம்பரியப் பண்பாட்டை மதிப்போம்

  திருநாடான நம் மலேசிய நாட்டில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். மலாய், சீனர், இந்தியர், கிறிஸ்துவர், இபான்,கடஜான், மெலானாவ் என்று பல்லின மக்களும் ஒரு கூட்டுக் குடும்பமாக இந்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவர்களை ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்வது அவசியமாகும். அவர்கள் மற்றவரின் சமயம், பண்பாடு ,கலை,கலாச்சாரம்...

பிற இன நிகழ்வில் கலந்துக் கொள்வோம்

மலேசியாவில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வோர் இனத்தவரும் தங்களுக்கெனத் தனி பாரம்பரியப் பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலேசியாவில் அனைவருக்கும் விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாட சுதந்திரம் உண்டு. அதே வேலையில் ஒருவர் மற்றவரின் மனம் வருந்துமாறு உணர்சிகளைத் தூண்டக் கூடாது. அவர்களிடையே வெறுப்பு உண்டாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நாட்டின் ஒற்றுமைக்கும்...

பிறர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வோம்

ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் வழக்கமாக நடைபெறுவதே ஆகும். ஒருவரின் இன்பமான தருணங்களில் மட்டும் நாம் பகிர்ந்து கொள்ளாமல் அவர்களின் துன்பமான தருணங்களிளும் கலந்து கொண்டு சிரமங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்; இதுவே மனித நேயம் என்று அழைக்கப்படும். நமது உற்றார் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சுகமின்றி இருந்தால் நாம் அவர்களைச் சென்று கண்டு...

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

எத்தனை காலம் எடுத்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம் MH 370

கடந்த மார்ச் 8-ஆம் தேதி 2014 இல், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS)  நிறுவனத்தை சேர்ந்த MH370 ரக விமானம் நடுவானில் மாயமாகி போனது.  இதில் பயணம் செய்த 239 பயணிகள் குறித்த விவரம் ஏதும் இன்னும் தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது....