செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ருக்குன் நெகாரா கோட்பாடு

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. மலாயா 1957இல் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர்.

நாடு நலம்பெறவும் மேலும் வலிமை பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவையாகும். உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும் அரசியல் நிலைத்தன்மையும் பல்லின மக்களின் ஒற்றுமையும் சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்த வேளையில் நாட்டின் தேசியக் கோட்பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.

இனம் மற்றும் நாடு எனப்படுபவை ஒரு வலுவான கடவுள் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டவையாகும். இந்நம்பிக்கையின் மூலம் இறையாண்மைக் கொண்ட நாடாக உருவாக்க முடியும். இஸ்லாம் மதம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாகும். மதம் இல்லாத ஒரு ஆளுமை, ஒரு நாட்டை வலுவிழக்கச் செய்யலாம் என்பதனை இக்கோட்பாடு உணர்த்துகிறது.

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.

இந்நாட்டின் குடிமகனாகிய நாம், பேரரசருக்கு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும். நாம் நமது பணிகளை நேர்மையான முறையில் இந்நாட்டிற்கு அர்பணிக்க வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் பொருளாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

இக்கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டு, அவற்றோடு இணங்கி விழுமிய அல்லது மகிமை அரசியலமைப்பைப் பாதுகாக்கும் தேவையை வலியுறுத்துகிறது. அதன் செயல்பாடானது குடிமக்கள் என்ற வகையில் அவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இ•து அரசாங்கத்தின் அமைப்பு, சட்டமன்ற மற்றும் மக்கள் சமூக பொருளாதார உரிமைகள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் மூலதனமாகும்.

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.

நீதி எனப்படுவது சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் அனைவருக்கும் சமம். அடிப்படை சுதந்திரங்கள், மலேசிய குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதம். மாநிலச் சட்டம், அரசியலமைப்பின் அடிப்படையாகும். ஆகையால் இறையாண்மையை ஏற்று காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அமைதியான நிலை மற்றும் வளமான ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒரு சட்டம் தேவை.

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

ஐந்தாவது கொள்கையானது மக்களின் ஆளுமை மற்றும் நடத்தை வளர்ச்சியை வலியுறுத்தும். இவற்றின் முதன்மை நோக்கமானது, ஒவ்வொரு குடிமகனையும் பண்பு மற்றும் கண்ணியமான ஒழுங்கு முறையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும். மரியாதை மற்றும் ஒழுக்கம் ஒரு சமரச சமுதாயத்தை உருவாக்க உதவும். இந்தக் கொள்கை மக்களின் நடத்தையைப் பராமரிக்கப்பட்டு மற்றும் மதிப்புகள் ஆளுமை ஏற்ப உருவாக்கப்பட்டு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

1 கருத்து:

  1. தேசியக் கோட்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் இருந்தால் சிறப்பு...

    பதிலளிநீக்கு