செவ்வாய், 2 செப்டம்பர், 2014

நமது தலைவர்களைப் போற்றுவோம்

துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ் 


இவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பிப்ரவரி 8, 1903ஆம் ஆண்டு அலோர் ஸ்டார், கெடா மாநிலத்தில் பிறந்தவர். துங்கு அவர்கள் கெடா மாநிலத்தின் 24ஆவது மன்னரான சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா அவர்களின் புதல்வனாவார். இவரைச் சுதந்திரத் தந்தை என்போம்.

துங்கு அவர்கள் சட்டத் துறை பயின்றவர். இவர் மலாய்க்காரர், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய மூவினங்களை ஒருமைப்படுத்தி ஒற்றுமையை வலுவோங்கச்செய்து மலேசியக் கூட்டணி கட்சியை உருவாக்கினார். நமது நாடு ஆங்கிலேயர் பிடியில் இருந்ததை விரும்பாது நமது நாட்டு சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டனர். இருப்பினும் தனது அறிவுப்பூர்வத்தால் ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழி வகுத்தார். துங்கு அப்துல் ரகுமான், துன் எச்.எஸ்.லீ மற்றும் துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நம் நாடு சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

துன் வீ.தி. சம்பந்தன்





இவர் ஜூன் 16, 1919ஆம் ஆண்டு சுங்கை சிப்புட், பேராக்கில் பிறந்தார். இவர் தமது கல்வியைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அங்கு அவர் இலக்கியத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பினார். ‘துன்’ விருது பெற்ற முதல் தமிழர் இவரே.

நாடு திரும்பிய அவர், 1955இல் மலேசிய இந்திய காங்கிரசை (MIC), மலேசியக் கூட்டணி கட்சியில் (Parti Perikatan) இணைந்தார். 1955ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிந்தா தொகுதியில் (பேராக்) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மலாயா சுதந்திரம் அடைய துங்குவுடன் இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டார். மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்காகத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தை 1960ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இந்தத் தேசிய நிலதிதிக் கூட்டுறவு சங்கம்தான் 1970ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.


துன் எச்.எஸ்.லீ






இவர் கவுசாவ் (Gaozhou) என்ற இடத்திலிருந்து புலம்பெயர்ந்த வணிகரின் மூத்தப் புதல்வனாவார். இவர் ஹாங்கோங்கில் 19 நவம்பர் 1900இல் பிறந்தார். இவர் 1924ஆம் ஆண்டுகளில் தனது தந்தைக்கு வணிகத்தில் தோள் கொடுக்க மலாயாவுக்கு வந்தார். வந்த சிறு காலங்களிலேயே மலாயாவிலுள்ள அரசியல் கட்சிகளிலும் ஒரு சில கழகங்களிலும் தீவிரமாகச் செயல்படத் துவங்கினார்.

துன் எச்.எஸ்.லீ அவர்கள் மலேசிய சீனர் சங்கம் துவக்கத்திற்குப் பெறும் பங்காற்றியவர். இதனைத் தொடர்ந்து மலேசியக் கூட்டணி கட்சி (Parti Perikatan) உறுவாக்கத்திற்கு அடித்தளமானவராவார். இவர் துங்கு அப்துல் ரகுமான் மற்றும் துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோருடன் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவராவார். மேலும், சீன சமூகம் மற்ற இன சமூகத்துடன் ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு இவர் பெறும் பங்காற்றியுள்ளார். மலாயா சுதந்திரத்திற்குப் பின், இவர் மலாயாவின் நிதித் துறை அமைச்சராகப் பதவியேற்றார். இன்றளவும் இவரது தியாகங்களை மலேசிய மக்கள் போற்றி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக