செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பிறரின் பாரம்பரியப் பண்பாட்டை மதிப்போம்


பிறரின் பாரம்பரியப் பண்பாட்டை மதிப்போம் 

திருநாடான நம் மலேசிய நாட்டில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். மலாய், சீனர், இந்தியர், கிறிஸ்துவர், இபான்,கடஜான், மெலானாவ் என்று பல்லின மக்களும் ஒரு கூட்டுக் குடும்பமாக இந்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவர்களை ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்வது அவசியமாகும். அவர்கள் மற்றவரின் சமயம், பண்பாடு ,கலை,கலாச்சாரம் முதலியவற்றை அறிந்து மதிக்க வேண்டும்.


பிற இனத்தவரின் சமயம் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் நாட்டில் ஒற்றுமை வளரும். நமக்கு அழைப்பு கிடைத்தால் பிற இன திருமண நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்துக் கொள்வதன் மூலம் பிற இன சமய பண்பாட்டுக் கூறுகளையும் அவர்களின் கலை கலாச்சாரங்களையும் அறிந்துக் கொள்ள நமக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.அவர்களுடைய பாரம்பரிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்ள முடிகிறது.

பிற இனத்தவரின் பாரம்பரிய நிகழ்வுகளின் கலந்துக் கொள்ளும் போது அவர்களுடைய சமய நம்பிக்கைகளையும் நாம் மதிக்க வேண்டும். சமய விழாக்களின் போது பிற இனத்தவர்கள் மேற்கொள்ளும் சடங்கு மற்றும் சம்பிராதாயங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். உதாரணத்திற்கு சீன மக்கள் சீன பண்டிகையின் போது பட்டாசுகளை வெடித்து பேய்களை விரட்டுவதை தங்களின் நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்தியர்களோ தைப்பூசத்தன்று தேங்காய்களை உடைத்து இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர்; இஸ்லாம் மத்த்தைச் சார்ந்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒருமாதம் நோன்பை மேற்கொண்டு தங்களின் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இது மட்டுமில்லாது சபா சராவாக்கில் வாழும் இபான் மற்றும் கடஜான் மக்கள் அறுவடைத் திருநாளை ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக்க் கொண்டாடுகின்றனர். இது போன்ற பிற இன நம்பிக்கைகளுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்.

பிற இனத்தவர் மேற்கொள்ளும் சடங்கு சம்பிரதாயங்களைக் கண்டு முகம் சுளிக்காது அவற்றைக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்த்தாகும். இவை நாட்டில் இனக் கலவரம் நடைபெறுவதை தவிர்ப்பதோடு நாட்டில் பல்லின மக்களிடையே ஒற்றுமை வளர பெறும் பங்காற்றுகிறது. மேலும், நல்லுறவின் வளப்பத்திற்கும் வழி வகுக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக