மலேசியா ஒரு வளமான நாடு மட்டும் அல்ல இது ஒரு மக்களாட்சி நாடாகும். மலேசியாவை ஜனநாயக நாடு என்றும் கூறுவர். மக்கள் தங்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுகின்றனர். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் இத்தேர்தலின் வழி சட்ட மன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தேடுக்கின்றனர். நாடாளுமன்றம் இரண்டு அவைகளாக பிரிக்கப்படுள்ளன. அவை மக்களவை மற்றும் மேலவை ஆகும். மக்களவையும் மேலவையும் சேர்ந்ததுதான் நாடாளுமன்றம்.
மக்களவை என்பது பொதுத்தேர்தலில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த அவையில் மக்களின் நலனுக்காக பேசுவர். மேலும் நாட்டின் சட்டங்களும் மக்களவையில் தான் இயற்றபடுகிறது. பொதுதேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களளின் பிரச்சனைகளையும் மேலும் சட்டதிட்டங்களையும் இங்கு தான் கூடிப்பேசி முடிவெடுப்பர். மேலும் பல புதிய திட்டங்களையும் மக்களுக்காக தீட்டி செயல்படுத்துவர். மக்களவை உறுப்பினர்களில் பிரதமரும் அவர் தம் அமைச்சர்களும் அடங்குவர்.
மக்களவையில் புதிய சட்டங்களை இயற்றுவதுடன் பழைய சட்டங்களையும் திருத்தி அது மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் மாநில மேம்படிற்காக பல திட்டங்களைத் தீட்டி மக்களவையில் பேசி முடிவெடுப்பர். மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் உடனே சட்டமாகாது. இச்சட்டங்கள் மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே அது சட்டமாகும். மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மேலவை உறுப்பினர்கள் மக்களால் பொதுத்தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படாதவர்கள். இவர்களை மாட்சிமை தங்கிய மாமன்னரே நியமிக்கின்றார். மேலவையை செனட் சபை என்றும் கூறுவர்.
மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் இங்கு ஆராயப்படும். அச்சட்டங்களில் குறைகள் அல்லது மாற்றங்கள் இல்லையென்றால் மாட்சிமை தங்கிய மாமன்னர் அங்கீகரித்து கையொப்பம் இட்டப் பின்னர் தான் அச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
மக்களவை என்பது பொதுத்தேர்தலில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த அவையில் மக்களின் நலனுக்காக பேசுவர். மேலும் நாட்டின் சட்டங்களும் மக்களவையில் தான் இயற்றபடுகிறது. பொதுதேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களளின் பிரச்சனைகளையும் மேலும் சட்டதிட்டங்களையும் இங்கு தான் கூடிப்பேசி முடிவெடுப்பர். மேலும் பல புதிய திட்டங்களையும் மக்களுக்காக தீட்டி செயல்படுத்துவர். மக்களவை உறுப்பினர்களில் பிரதமரும் அவர் தம் அமைச்சர்களும் அடங்குவர்.
மக்களவையில் புதிய சட்டங்களை இயற்றுவதுடன் பழைய சட்டங்களையும் திருத்தி அது மக்களுக்குப் பயன்படும் வகையில் அமைகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தத்தம் மாநில மேம்படிற்காக பல திட்டங்களைத் தீட்டி மக்களவையில் பேசி முடிவெடுப்பர். மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் உடனே சட்டமாகாது. இச்சட்டங்கள் மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே அது சட்டமாகும். மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மேலவை உறுப்பினர்கள் மக்களால் பொதுத்தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படாதவர்கள். இவர்களை மாட்சிமை தங்கிய மாமன்னரே நியமிக்கின்றார். மேலவையை செனட் சபை என்றும் கூறுவர்.
மக்களவையில் தீட்டப்படும் சட்டங்கள் இங்கு ஆராயப்படும். அச்சட்டங்களில் குறைகள் அல்லது மாற்றங்கள் இல்லையென்றால் மாட்சிமை தங்கிய மாமன்னர் அங்கீகரித்து கையொப்பம் இட்டப் பின்னர் தான் அச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலவை உறுப்பினர்களின் பதவி காலம் மூன்றாண்டுகள் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக