புதன், 27 ஆகஸ்ட், 2014

மாமன்னரையும் ஆட்சியாளரையும் போற்றுவோம்

மலேசிய நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மிக உயரிய தலமைப் பொறுப்பினை வகிப்பவர் மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆவார். மாமன்னரை மலாய் ஆட்சியாளர் பேரவை தேர்வு செய்கிறது.

இப்பேரவையில் நெகிரி செம்பிலான் , சிலங்கூர், பெர்லிஸ், திரங்கானு, கெடா , கிளந்தான், பஹான், ஜொகூர், பேராக் ஆகிய ஒன்பது மாநிலங்களின் மலாய் ஆட்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்பேரவைக் கூட்டங்களில் பினாங்கு , மாலக்கா , சபா , சரவாக் முதலிய மாநிலங்களின் ஆளுநர்களும் கலந்து கொள்கின்றனர்.

மலாய் ஆட்சியாளர் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படும் பேரரசர் ஐந்து ஆண்டுகளுக்கு அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார். ஒவ்வொரு மலாய் ஆட்சியாளருக்கும் அரியணையில் அமரும் வாய்ப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.

மலேசியாவை ஆட்சி செய்த முதல் மாமன்னர் துவாங்கு அப்துல் ரஹ்மான் இப்னி அல்மர்ஹூம் துவாங்கு முக்மட் இவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 31 ஆகஸ்ட் 1957 முதல் 1 ஏப்ர்ல் 1960 வரை ஆட்சி புரிந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக