வீணை
வீணை ஒரு நரம்பு இசை கருவி . மிக அழகிய இசைகருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது .இந்திய இசையின் பல நுட்பங்களையும் , தத்துவங்களையும் இந்த கருவியின் மூலம் தெளிவாக வெளிபடுத்தலாம் . பலா மரத்தினால் வீணை செய்யபடுகின்றது . வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும் இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தபடுகின்றன. தாள சுருதி தந்திகள் வலது கை சுண்டு விரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்கு சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்று கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவார் . நகங்களால் மீட்டுவதும் உண்டு வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோலை அணிந்து கொண்டு மீட்டு கோலை இடது கையால் அழுத்தி , கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார் . தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையல் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்
தவில்

தோலிசைக் கருவி ‘தவுல்’. இதனை, தவில் என்றும் அழைப்பர். இது மிகப் பழமையான
இசைக்கருவியாகும். பஞ்சமரபு என்ற பழைய இசை நூல் இதனைக் குறிக்கிறது.
பீப்பாய் வடிவில் இருக்கும்.பலா மரத்தால் செய்யப்படுவது. இதன் இரு
வாய்ப்பகுதிகளும் தோலால் மூடப்பட்டிருக்கும். ஒருபுறம் உச்ச ஒலியையும்,
மறுபுறம் மந்த ஒலியையும் தருவது. கலைஞர்கள் இதன் இடதுபுறத்தைக்
குச்சியாலும், வலதுபுறத்தைக் கையாலும் அடிப்பர். நாதசுரத்தோடு இணைந்து
இசைக்கப்படும் கருவி. நையாண்டி மேளத்தில் இக்கருவி மிகவும் முக்கியமானது.
நையாண்டி மேளக் கலைஞர்கள் இக்கருவியை இசைக்கும் போது இருபுறமும்
குச்சிகளையே பயன்படுத்துவர்.
நாதஸ்வரம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக