மலேசியாவில் பல இன மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வோர் இனத்தவரும் தங்களுக்கெனத் தனிப் பாரம்பரியப் பண்பாட்டினைக் கொண்டுள்ளனர். மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரியப் பண்பாட்டு உடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பார்கள். ஒவ்வோர் இனத்தவரின் உடையிலும் தனித்தன்மையிலும் பாரம்பரிய வரலாற்றுப் பின்னணியையும் காண முடியும்.
மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதால் தங்கள் கலாச்சாரத்தை மற்ற இனத்தவருக்குக் காண்பிக்க முடிகிறது. பண்டிகைகள், விழாக்கள், திருமணம், முதலிய நிகழ்வுகளில் இவ்வுடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பர். பண்டிகைகள், விழாக்கள், திருமணம் முதலிய நிகழ்வுகளில் ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்துக் கலந்து கொள்வது மலேசியரின் பண்பாகும்.
மலேசியர்களுள் ஒருவர் மற்றொருவரின் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து மதிப்பளிப்பதன் வழி மற்ற இனத்தவரின் சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். பிற இனத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் நமது பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடுதல் அவசியமானதாகும். இவை மலேசிய மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்து ஒற்றுமையாக வாழ பெரிதும் துணைபுரிகிறது. ’கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதற்கேற்ப மலேசிய மக்கள் ஓரினமாகக் கூடி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
பாரம்பரிய உடைகளை அணிவதன் மூலம் ஒவ்வோர் இனமும் தங்களின் இனத்தை அடையாளம் காட்ட முடியும். அதுமட்டுமின்றி தங்கள் இனத்தைப் பற்றிய பெருமிதம் அவர்களுக்கிடையே உண்டாகும். பாரம்பரிய உடைகள் பிற இனத்தவர் மற்றவரின் பாரம்பரியத்தை அறிய வழி வகுப்பதோடு ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடையே ஒற்றுமையுணர்வையையும் உருவாக்கும் வல்லமைக் கொண்டது. இளையத் தலைமுறையினர் தங்களின் கலாச்சாரப் பண்புகளை உயர்வாக எண்ண வேண்டும். பாரம்பரியத்தையும் பாரம்பரிய உடைகளை அணிவதையும் மறவாதிருக்காமல் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மலேசிய மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதால் தங்கள் கலாச்சாரத்தை மற்ற இனத்தவருக்குக் காண்பிக்க முடிகிறது. பண்டிகைகள், விழாக்கள், திருமணம், முதலிய நிகழ்வுகளில் இவ்வுடைகளை அணிந்து அழகாகக் காட்சியளிப்பர். பண்டிகைகள், விழாக்கள், திருமணம் முதலிய நிகழ்வுகளில் ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்துக் கலந்து கொள்வது மலேசியரின் பண்பாகும்.
மலேசியர்களுள் ஒருவர் மற்றொருவரின் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து மதிப்பளிப்பதன் வழி மற்ற இனத்தவரின் சமயம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். பிற இனத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் நமது பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடுதல் அவசியமானதாகும். இவை மலேசிய மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்து ஒற்றுமையாக வாழ பெரிதும் துணைபுரிகிறது. ’கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதற்கேற்ப மலேசிய மக்கள் ஓரினமாகக் கூடி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
பாரம்பரிய உடைகளை அணிவதன் மூலம் ஒவ்வோர் இனமும் தங்களின் இனத்தை அடையாளம் காட்ட முடியும். அதுமட்டுமின்றி தங்கள் இனத்தைப் பற்றிய பெருமிதம் அவர்களுக்கிடையே உண்டாகும். பாரம்பரிய உடைகள் பிற இனத்தவர் மற்றவரின் பாரம்பரியத்தை அறிய வழி வகுப்பதோடு ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடையே ஒற்றுமையுணர்வையையும் உருவாக்கும் வல்லமைக் கொண்டது. இளையத் தலைமுறையினர் தங்களின் கலாச்சாரப் பண்புகளை உயர்வாக எண்ண வேண்டும். பாரம்பரியத்தையும் பாரம்பரிய உடைகளை அணிவதையும் மறவாதிருக்காமல் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக