புதன், 27 ஆகஸ்ட், 2014

மலேசியாவின் ஆட்சிமுறை அமைப்பு

மாட்சிமை தங்கிய மாமன்னரே நாட்டின் தலைவர் ஆவார். மலேசியாவில்  மொத்தம் ஒன்பது சுல்தான்கள் உள்ளனர். இவர்கள் முறையே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாட்சிமை தங்கிய மாமன்னராக பதவி ஏற்கின்றனர். பொதுத்தேர்தலின் வழி மக்கள் நாட்டை ஆளும் அரசாங்கத்தைத் தேர்ந்துகின்றனர். மக்கள் பொதுத்தேர்தலின் மூலம் சட்ட மன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தேடுக்கின்றனர். பெரும்பான்மையான வாக்கு கிடைத்தவர்களே அரசாங்கத்தை அமைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மை கட்சி வேட்பாளரை மாட்சிமை தங்கிய மாமன்னர் பிரதமராக தேர்ந்தேடுக்கிறார். பிரதமர் நாட்டை முறையே ஐந்து ஆண்டுகள் நிர்வகிக்கிறார். பிரதமர் தமக்கு உதவும் வகையில் அமைச்சரவையை அமைத்து நாட்டை நிர்வகிக்கிறார். அமைச்சரவையில் உள்ளவர்களே அமைச்சர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மக்களின் நலனுக்காகப் பல திட்டங்களையும் சட்டங்களையும் தீட்டுகின்றனர். கீழ்காணும் நிரலோட்ட வரை மலேசிய ஆட்சிமுறையைக் காட்டுகிறது.

மாநில ரீதியில் பார்த்தோமானால், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் ஒருவரை அம்மாநில  ஆட்சியாளர் (சுல்தான் / ராஜா / ஆளுநர்)  மந்திரி புசாராக தேர்தேடுக்கிறார். மந்திரி புசார் மாநில ஆட்சிக் குழுவினை அமைத்து மாநிலத்தை நிர்வகிக்கிறார். கீழ்வரும் நேரலோட்ட வரை மாநில ஆட்சி முறை அமைப்பை காட்டுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக