.jpg)
ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் வழக்கமாக நடைபெறுவதே ஆகும். ஒருவரின் இன்பமான தருணங்களில் மட்டும் நாம் பகிர்ந்து கொள்ளாமல் அவர்களின் துன்பமான தருணங்களிளும் கலந்து கொண்டு சிரமங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்; இதுவே மனித நேயம் என்று அழைக்கப்படும். நமது உற்றார் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சுகமின்றி இருந்தால் நாம் அவர்களைச் சென்று கண்டு நலம் விசாரிக்க வேண்டும்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பர்களைச் சென்று காண வேண்டும்;
ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் சிறு பரிசு பொட்டலங்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்து நலம் விசாரித்து வர வேண்டும். இம்மாதிரியான வேளைகளில் நாம் கூறும் ஆறுதல் மொழிகள் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் இருக்கும். நாம் கூறும் ஆறுதல் மொழிகள் மருந்துக்குச் சமம் என்பார்கள். இந்த நல்ல பழக்கத்தை நாம் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் நாம் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்து இத்திருநாட்டில் ஒற்றுமையாக வாழலாம். இதன் மூலம் பிற இன நண்பர்களோடு நல் உறவை வளர்த்துக் கொள்ளவும் வழி வகுக்கும்.இது மட்டுமின்றி வெள்ளம், வீடு தீக்கிரையாகுதல், சாலை விபத்து போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை அவ்வப்போது வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் உதவியானது பொருள் அல்லது பண வடிவில் இருக்கலாம்.
.jpg)
நம் அண்டை வீடுகளில் ஒரு துக்ககரமான நிகழ்வு நடந்தேறினால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனதிற்கு இதமான ஓரிரு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது சிறந்த பண்பாகும். மேலும் ஒவ்வோர் மலேசியரின் மனதிலும் ஜாதி, மதம்,இன பேதம் பார்க்காமல் பிற இனத்தவரையும் தன் உறவாகக் கருதும் மனப்போக்கு விதைக்கப்பட வேண்டும்.இது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்றுத் தர வேண்டும். மலேசியர்களுள் ஒருவர் மற்றொருவரின் சுக துக்கங்களை அறிந்து அதற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக