ஒவ்வொரு நாட்டையும் அடையாளம் காட்டும் தனித் தன்மைகள் உள்ளன. பொறுப்புள்ள குடிமக்கள் என்ற அடிப்படையில் நாம் நம் நாட்டின் தனித் தன்மைகளைக் காட்டும் எல்லா அடையாளங்களையும் அறிந்திருப்பதுடன் அவற்றின் சிறப்பியல்புகளையும் உணர்ந்திருத்தல் அவசியம். மேலும்,நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு அந்த அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ள நாம் அரும்பாடுபட வேண்டும்.
நம் நாட்டின் முதன்மையான அடையாளம் நாட்டின் தேசியக் கோட்பாடு.தேசியக் கோட்பாட்டில் மலேசியர்களாகிய நாம் நமது முழு சக்தியையும் முயற்சியையும் ஒருமுகப்படுத்தி நாட்டின் குறிக்கோளை அடைய உறுதியளிக்க வேண்டும்.நாட்டின் ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்படுகளையும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.அவை இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல், சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் ஆகும்.
அடுத்தது, நாட்டின் முக்கியச் அடையாளமான நமது நாட்டுப் பண் 'நெகாரா கூ'. ஒவ்வொரு குடிமகனும் நாட்டுப் பண்ணை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.நெகாரா கூ பாடும் பொழுதொ அல்லது எங்கு இப்பாடலை ஒலியேற்றப்பட்டாலோ நாம் கண்டிப்பாக நிமிர்ந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும்.
ஜாலூர் கெமிலாங் நம் நாட்டின் மற்றுமொரு அடையாளம¡கும். ஜாலூர் கெமிலாஙில் உள்ள பதினான்கு வெள்ளை, சிவப்பு நிறக் கோடுகள் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்கின்றன.நட்சத்திரத்திலுள்ள 14 கூர் முனைகளும் ஒருமைப்பாடுடைய 13 மாநிலங்களையும் கூட்டரசு அரசாங்கத்தையும் குறிக்கின்றன. இளம் பிறையிலும் நட்சத்திரத்திலும் காணப்படும் மஞ்சள் வண்ணம் அரச பரம்பரையைக் குறிக்கின்றது. கருநீல நிறம் நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டைப் பிரதிப்பலிக்கின்றது. சிவப்பு நிறம் வீரத்தைக் குறிக்கின்றது. வெண்மை நிறம் புனிதத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இஸ்லாமிய மதம் மலேசியத் திருநாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்பதை இளம் பிறை காட்டுகின்றது.
தேசிய முத்திரையும் நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.அதில் ஐந்து கிரிஸ் (வாள்கள்), பிறை, இரண்டு புலிகள், செம்பருத்தி மலர், நான்கு மாநிலங்களின் சின்னங்கள், பதினான்கு கூர் முனைகள் ஆகியவை உள்ளன.நம் நாட்டு முத்திரையின் கருப்பொருள் கூட்டுறவு மேன்மைக்கு வித்து ஆகும்.
நம் நாட்டின் தேசிய மொழி மலாய் மொழியாகும்.இதுவும் நம் நாட்டின் முக்கிய அடையாளமாகும். மொழி இனத்தின் உயிராகும்.1957 இல் கூட்டரசு மலாய் நாடுகள் அமைக்கப்பட்டபோது மலாய் மொழி, நமது நாட்டின் தேசிய மொழியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 152 வது பிரிவில் அதிகாரப்பூர்வமாகக் குறிக்கப்பட்டத்து.
இறுதியாக, நம் நாட்டின் அடையாளத்தில் ஒன்றாகிறது நன் நாட்டின் தேசிய மலர். ஆம், நம் நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி ஆகும். செம்பருத்தி மலர் பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. 28 ஜூலை 1960 இல் செம்பருத்தி மலர் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நாம் அனைவரும் இந்த அனைத்து அடையாளங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
நம் நாட்டின் முதன்மையான அடையாளம் நாட்டின் தேசியக் கோட்பாடு.தேசியக் கோட்பாட்டில் மலேசியர்களாகிய நாம் நமது முழு சக்தியையும் முயற்சியையும் ஒருமுகப்படுத்தி நாட்டின் குறிக்கோளை அடைய உறுதியளிக்க வேண்டும்.நாட்டின் ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்படுகளையும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.அவை இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல், சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் ஆகும்.
அடுத்தது, நாட்டின் முக்கியச் அடையாளமான நமது நாட்டுப் பண் 'நெகாரா கூ'. ஒவ்வொரு குடிமகனும் நாட்டுப் பண்ணை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.நெகாரா கூ பாடும் பொழுதொ அல்லது எங்கு இப்பாடலை ஒலியேற்றப்பட்டாலோ நாம் கண்டிப்பாக நிமிர்ந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும்.
ஜாலூர் கெமிலாங் நம் நாட்டின் மற்றுமொரு அடையாளம¡கும். ஜாலூர் கெமிலாஙில் உள்ள பதினான்கு வெள்ளை, சிவப்பு நிறக் கோடுகள் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்கின்றன.நட்சத்திரத்திலுள்ள 14 கூர் முனைகளும் ஒருமைப்பாடுடைய 13 மாநிலங்களையும் கூட்டரசு அரசாங்கத்தையும் குறிக்கின்றன. இளம் பிறையிலும் நட்சத்திரத்திலும் காணப்படும் மஞ்சள் வண்ணம் அரச பரம்பரையைக் குறிக்கின்றது. கருநீல நிறம் நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டைப் பிரதிப்பலிக்கின்றது. சிவப்பு நிறம் வீரத்தைக் குறிக்கின்றது. வெண்மை நிறம் புனிதத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இஸ்லாமிய மதம் மலேசியத் திருநாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்பதை இளம் பிறை காட்டுகின்றது.
தேசிய முத்திரையும் நமது நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.அதில் ஐந்து கிரிஸ் (வாள்கள்), பிறை, இரண்டு புலிகள், செம்பருத்தி மலர், நான்கு மாநிலங்களின் சின்னங்கள், பதினான்கு கூர் முனைகள் ஆகியவை உள்ளன.நம் நாட்டு முத்திரையின் கருப்பொருள் கூட்டுறவு மேன்மைக்கு வித்து ஆகும்.
நம் நாட்டின் தேசிய மொழி மலாய் மொழியாகும்.இதுவும் நம் நாட்டின் முக்கிய அடையாளமாகும். மொழி இனத்தின் உயிராகும்.1957 இல் கூட்டரசு மலாய் நாடுகள் அமைக்கப்பட்டபோது மலாய் மொழி, நமது நாட்டின் தேசிய மொழியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 152 வது பிரிவில் அதிகாரப்பூர்வமாகக் குறிக்கப்பட்டத்து.
இறுதியாக, நம் நாட்டின் அடையாளத்தில் ஒன்றாகிறது நன் நாட்டின் தேசிய மலர். ஆம், நம் நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி ஆகும். செம்பருத்தி மலர் பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. 28 ஜூலை 1960 இல் செம்பருத்தி மலர் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நாம் அனைவரும் இந்த அனைத்து அடையாளங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக