பல இன மக்களைக் கொண்ட நம் நாட்டில் பலவகை கலாச்சாரம் கலந்திருந்தாலும். நம் வாழ்க்கையில் கலந்துவிட்ட உணவுகள் பலவகையாக இருந்தாலும் அவற்றிற்கும் பூர்வீகம் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வதில் நாம் பெருமையடைய வேண்டும்.
லெமாங் மலேசியா, இந்தோனிசியா மற்றும் போர்னியொவின் பூர்வீக உணவுகளில் ஒன்றாகும் பண்டைய காலத்தில் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மக்கள் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள். மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். லெமாங் வெந்தவுடன் மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டிக் கொடுப்பர்.
தோசையை எடுத்துக் கொண்டால் அது 6ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் தமிழர்களின் பூர்வீக உணவாகும். உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால், தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும்.இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும். தோசையைக் காலைச் சிற்றுண்டியாவோ அல்லது இரவு உணவாகவோ தான் உண்பார்கள்.
சீனர்களின் பாரம்பரிய உணவான வன் தான் மீ தோன்றியது வட சீனாவாகும். இந்த மீ ஒன்றோடு ஒன்று பின்னி மிக குழப்பமாக இருக்கும். இதை இறாலுடன் சேர்த்துச் சமைப்பார்கள். இது மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும். குளிர் கால மத்தியில் ஏற்படுத்தும் உடல் வெடிப்பைத் தடுக்கும் ஒர் உணவாகும்.
லெமாங் மலேசியா, இந்தோனிசியா மற்றும் போர்னியொவின் பூர்வீக உணவுகளில் ஒன்றாகும் பண்டைய காலத்தில் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மக்கள் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள். மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். லெமாங் வெந்தவுடன் மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டிக் கொடுப்பர்.
தோசையை எடுத்துக் கொண்டால் அது 6ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் தமிழர்களின் பூர்வீக உணவாகும். உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால், தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும்.இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும். தோசையைக் காலைச் சிற்றுண்டியாவோ அல்லது இரவு உணவாகவோ தான் உண்பார்கள்.
சீனர்களின் பாரம்பரிய உணவான வன் தான் மீ தோன்றியது வட சீனாவாகும். இந்த மீ ஒன்றோடு ஒன்று பின்னி மிக குழப்பமாக இருக்கும். இதை இறாலுடன் சேர்த்துச் சமைப்பார்கள். இது மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும். குளிர் கால மத்தியில் ஏற்படுத்தும் உடல் வெடிப்பைத் தடுக்கும் ஒர் உணவாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக