செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மலேசியா பிறந்த கதை

1957ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 1963ஆம் ஆண்டு வரை மலாயாவை, மலாயா கூட்டமைப்பு என்று அழைத்தனர். அதற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மலாக்காவைக் கண்டு பிடித்த பரமேசுவரா காலத்தில் தீபகற்ப மலாயாவை, மலாயா என்றே அழைத்தனர். ராஜ ராஜ சோழன் காலத்திலும் ஜெயவர்மண் ராஜவர்மன் காலத்திலும் மலாயாத் தீபகற்பம் மாலாயா என்றுதான் அழைக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு மலாயாக் கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது.

    1963 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி வட போர்னியோ சுயாட்சி பெற்றது. அதற்கு முன் 1962இல் கோபால்ட் ஆணையம் அமைக்கப்பட்டு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மலேசியாவில் இணைவதற்கு வட போர்னியோ மக்களுக்குச் சம்மதமா இல்லையா என்ற கணக்கெடுப்பு செய்யப்பட்டது. பெருவாரியான மக்கள் மலேசியாவில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்தனர். இதில் வட போர்னியோ என்று அழைக்கப்பட்ட சபா, மலாயா, சரவாக், சிங்கப்பூர் ஆகியவை உறுப்பியம் பெற்றன.

    இவ்வனைத்து நாடுகளும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்தன. துங்கு அவர்கள் அவற்றை இணைத்து மலாயாவை ஒரு பெரிய நாடாக உருவாக்க எண்ணினார். மலாயாவுடன் இணைந்ததால் அவற்றிற்குச் சுதந்திரம் கிடைக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவுறுத்தியது. பேச்சு வார்த்தைகள் பல முறை தொடரப்பட்டன. சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.

    மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இந்நாடு தீபகற்ப மலேசியா எனவும் அழைக்கப்பட்டது. மலேசியா மேற்கு மலேசியா, கிழக்கு மலேசியா என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன.
    மலேசியாவை மூவினங்களைக் கொண்ட கூட்டணிக் கட்சி ஆட்சி புரிந்தது. துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆட்சி புரிந்த மலேசியா நல்ல மேம்பாடு கண்டு வந்தது. மூவினங்களைக் கொண்ட சிறந்த நாடாக மலேசியா விளங்கியது. 1971இல் மலேசிய அரசு ‘தேசிய பண்பாட்டுக் கொள்கையை’ அறிவித்தது. மலாய் மொழியே தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மலேசியா சுல்தான்கள் கொண்ட ஆட்சியாக விளங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக