மலாயா கூட்டரசின் தலைநகரான கோலாலம்பூரின் சிலாங்கூர் கிளப் திடல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சியளித்தன. மக்கள் கூட்டம் அரங்கில் நிறைந்து காணப்பட்டது. அனைவரின் பார்வையும் இரண்டு கொடி கம்பங்களின் மீதும் அருகே உள்ளே மணிக் கூண்டின் மீதுமே உள்ளது.
இன்று மலாயா கூட்டரசு மக்களின் வாழ்வில் ஒரு பொன்னாள், திருநாள். ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறும் இனிய நாள். இனி நம் மலேசியா நம் மக்களுக்கே சொந்தமாகும், நாமே ஆட்சி புரியபோகும் வரலாற்றுத் திருநாள்.
ஏழு வருடங்கள் கழிந்தது, 30 ஆகஸ்டும் வந்தது. கடிகார முள் இரவு மணி 11.50ஐ காட்டியது. மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம் நெருங்கியது. கடிகார முள் மெதுவாக நகர்ந்து 12.00 மணியைக் காட்டியது. இதோ நாம் காத்திருந்த அந்த நேரம் வந்தது, மணியோசை முழங்குகின்றது. இங்கிலாந்து நாட்டுக் கொடியான ‘யூனியன் ஜெக்’ மெல்ல மெல்ல இறக்கப்பட்டது. சுதந்திர மலாயாவின் கொடி மெல்ல மெல்ல ஏற்றப்பட்டது, நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. கொடி பூமியைத் தொட்டதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆனந்தமும் ஆரவாரமும் எல்லையின்றி சிறகடிக்கத் தொடங்கியது. மக்களின் கொண்டாட்டமும் அரங்கத்தை அதிரவைத்தது. இராணுவத்தினரின் குண்டு முழக்கங்கள் கேட்டன. வான வெடிகள் வெடிக்கப்பட்டன. அவை பல வண்ண நிறங்களாலும் வடிவங்களாலும் வானை அலங்கரித்தன.
அனைவரும் நம் நாட்டின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் உரையைக் கேட்க ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர். அவரும் “மெர்டேக்கா” என ஏழு முறை முழக்கமிட்டார். மக்களும் ஒவ்வொரு முறையும் அவரைப் பின் தொடர்ந்து அரங்கமே அதிரும் வண்ணம் இடியென முழங்கினர். அனைத்து இன மக்களும் எவ்வித பேதமும் இன்றி சகோதரத்துவத்தோடு மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்.
மதிப்பிற்குரிய நமது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக நாடு விடுதலைப் பெற்றது அறிவிக்கப்பட்டது. பிரதான மேடையில் ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சியாளர்களும் அமர்ந்துள்ளனர். பிரிட்டிஷ் அரசியாரின் பிரதிநிதி வெலிங்டன் மோகன் உரை நிகழ்த்தியதும் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் விடுதலை ஆவனம் வழங்கப்பட்டது. அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, நமது பிரதமர் துங்கு அவர்கள் மக்களை நோக்கி கம்பீரமாக நின்று “மெர்டேக்கா” என முழங்கினார். அந்நேரம் மலர்ந்தது சுதந்திர மலாயா.
மலாயாவின் சுதந்திர தின நினைவாக தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு திங்கள் 31ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுந்திர நினைவு நாளை மையமாகக் கொண்டு கருப்பொருள் உருவாக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டுகள்:-
1. KERANAMU MALAYSIA (2000-2005)
உன்னால்தான் மலேசியா
2. BERSATU MAJU (1977)
ஒன்றுபட்டு உயர்வோம்
3. BERJAYA (1990)
வெற்றி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக