செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தாய் மண்ணைக் காப்போம்

அன்னை மலையகமே! அகிலத்தின் ஓர்துளியே!
                ஆழிசூழ் உலகினிலே அழகுமீன் வடிவமொடு
இன்னல் களைந்தே ஈட்டுகின்ற ஆட்சிமுறை
                மின்னலின் வேகத்தில் மீட்டுகின்ற முன்னேற்றம்!

இன்பத்தின் எல்லையிலே இனம்பாரா ஒற்றுமையும்
                இணைந்திருக்கும் மூவினத்தின் எடுப்பான உழைப்புமுறை!
துன்பத்தின் சாயலின்றித் தூய்மையின் வழியினிலே
                அன்பான நெறியினிலே ஆற்றுகிறார் தன் பணியை!

பெற்ற சுதந்திரம் பேணிடுவோம்
                பேரும் புகழும் ஈட்டிடுவோம்!
உற்ற துணையாய் விளங்கிடுவோம்!
                நாளும் ஊருணி போன்றே செயல்படுவோம்!

வந்துவந்து மக்கள் கூடி வானளாவச் சேரினும்
                தந்துதந்து பாலமுதம் தாங்கிவந்த அன்னையைச்!
சிந்துமாடிக் கைகள் கூப்பிச் சிரங்க விழ்த்து
                எந்நாளும் என்றனாவி உன்றனுக்கே என்றிடு!

நான் பிறந்து நான் வளர்ந்து நான் மணந்த நாட்டிலே
                வீண்குழப்பம் இல்லையில்லை வேற்றுமைகள் இல்லையே!
தேன்சுரக்குப் பூவடா நம் தேசமக்கள் நெஞ்சமே
                வீண்பகைக்கு வித்திடோம் வீணர்களை விட்டிடோம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக