மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்றும் கூட அழைக்கலாம். மலேசியா 1957இல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா தோற்றம் பெற்றதால் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவை பெரும் நன்மைகள் அடைந்தன.
மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர்தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கேச் சிறப்பைக் கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் எனக் கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.
விமான நிலையத்தைத் தொடும் போதே, பிரமாண்டத்தைக் கொட்டிக்காட்டுகிறது. இந்த விமான நிலையம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானச் சேவை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, நகரின் நடுவே உலகின் அதிசயமான கோலாலம்பூர் பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம் உள்ளது. உலகிலேயே உயரமான கோபுரம் 451.9 மீட்டர் உயரம் உள்ள இந்தக் கோபுரம், 88 அடுக்குகளைக் கொண்டது. இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தைக் காணலாம். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசிக்க முடியும்.
மலேசியாவில் அமைந்துள்ள நீண்ட தூர ‘ஹைவே’ சாலையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்திற்கும் மேல் செல்ல முடியும். நேர்த்தியான சாலையில், விரைவாகச் செல்லலாம், சாலைகளில் குடுக்கீடுகல் கிடையாது; யாரும் கடப்பதும் இல்லை. தொடர்வண்டியின் சேவையினால் பல இடங்களுக்கு எந்தத் தடையின்றி விரைவாகவும் செல்ல முடியும்.
மலேசியா இப்பொழுது பல்லினங்களைக் கொண்ட சிறந்த மக்களாட்சி நாடாக விளங்குகின்றது. இன ஒற்றுமைக்கு உலக அளவில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொழில்துறைகளிலும் மேம்பாடு அடைந்து சிறந்து விளங்குகிறது. சுருங்கக் கூறின், மலேசிய நாட்டினால் மலேசியர் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர்தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கேச் சிறப்பைக் கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் எனக் கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.
விமான நிலையத்தைத் தொடும் போதே, பிரமாண்டத்தைக் கொட்டிக்காட்டுகிறது. இந்த விமான நிலையம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானச் சேவை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, நகரின் நடுவே உலகின் அதிசயமான கோலாலம்பூர் பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம் உள்ளது. உலகிலேயே உயரமான கோபுரம் 451.9 மீட்டர் உயரம் உள்ள இந்தக் கோபுரம், 88 அடுக்குகளைக் கொண்டது. இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தைக் காணலாம். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசிக்க முடியும்.
மலேசியாவில் அமைந்துள்ள நீண்ட தூர ‘ஹைவே’ சாலையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்திற்கும் மேல் செல்ல முடியும். நேர்த்தியான சாலையில், விரைவாகச் செல்லலாம், சாலைகளில் குடுக்கீடுகல் கிடையாது; யாரும் கடப்பதும் இல்லை. தொடர்வண்டியின் சேவையினால் பல இடங்களுக்கு எந்தத் தடையின்றி விரைவாகவும் செல்ல முடியும்.
மலேசியா இப்பொழுது பல்லினங்களைக் கொண்ட சிறந்த மக்களாட்சி நாடாக விளங்குகின்றது. இன ஒற்றுமைக்கு உலக அளவில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொழில்துறைகளிலும் மேம்பாடு அடைந்து சிறந்து விளங்குகிறது. சுருங்கக் கூறின், மலேசிய நாட்டினால் மலேசியர் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக