வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பெருமைக்குரிய மலேசியா

பெருமைக்குரிய மலேசியா நம் தாய் திருநாடு ஆகும். இங்கு நீர் வளமும் நில வளமும் நிறைந்து காணப்படுகிறது. மலேசியா மிதமான சிதோஷ்ணநிலையைக் கொண்ட நாடாகும். இங்கு ஆண்டுதோறும் வெயில் மற்றும் மழை உண்டு.

மலேசியா பல்லின மக்களைக் கொண்ட நாடு. இங்கு மிகப் பெரிய மூன்று முக்கிய இனங்களாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் திகழ்கிறார்கள். மேலும் ஈபான், கடசான், மூரூட் போன்ற இனங்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கொப்ப இங்கு ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் பல கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றுகின்றனர். இவர்கள் ஹரிராயா, சீனப்புத்தாண்டு, தீபாவளி, காவாய் போன்ற பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்குள்ள மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர். மலாய் நம் நாட்டின் தேசிய மொழியாகும்.

    மன்னர்க்கழகு செங்கோன் முறைமை என்பதற்கேற்ப மாமன்னர் மலேசியாவை சிறப்பாக ஆட்சி செய்கிறார். மலேசியா நிலைத்தன்மையான அரசியலைக் கொண்டுள்ளது. இங்கு சண்டை, சச்சரவு இல்லை. மக்களிடயே ஒற்றுமை எண்ணமே மேலோங்கி உள்ளது. ஒரே மலேசியா கொள்கைத்திட்டம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலும் வளரச் செய்துள்ளது. மலேசியா 2020 தூரநோக்குச் சிந்தனை கொண்ட நாடு. மக்கள் எண்ணுவது உயர்வு என்பது போல உயரிய சிந்தனையுடையவர்கள். 2020-ல் நாடு எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருப்பதே இத்தூரநோக்கு சிந்தனையின் இலட்சியமாகும்.

    பெருமைக்குரிய நம் நாடு பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி  ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களின் வாழ்க்கை தரமும்  உயர்ந்து நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். இங்கு வேலையில்லா திண்டாட்டம் குறைவு. நம் நாட்டில் கல்வித்தரமும் உயர்வடைந்து வருகின்றது. பொது, தனியார் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. அவை மாணவர்களுக்குத் தரமான உயர்க்கல்வியை வழங்குகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் புதிய கல்வி பெருந்திட்டதால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றது. மேலும் நம் நாட்டில் நோயாளிகள் நல்ல தரமான மருத்துவ சேவைகளையும் பெற முடியும்.
   
நாம் வெளிநாடுகளில் சென்று பார்க்கும் போதுதான் நம்முடைய நாடு எவ்வளவு வளமிக்கது, சுதந்திரமுடையது, சுபிட்சமானது என்று உணர முடிகிறது. மற்ற நாடுகளை விட நாம் இந்த நாட்டில் மிகவும் சுதந்திரமாக உள்ளோம். ஆகவே, மலேசியராகப் பிறந்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டும்:நாட்டையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக