வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நமது பெருமைக்குரிய பாரம்பரிய உடைகள்

மலேசியர்கள் பல்வேறு பண்பாட்டை உடையவர்கள் என்பதை அவர்களின் பாரம்பரிய உடைகளின் மூலம் காணலாம். ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரிய உடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். வழிபாட்டு இடங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பாரம்பரிய உடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

    மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை பாஜு குரோங், மற்றும் பாஜு மெலாயு ஆகும். பாஜு குரோங் பெண்களுக்கும் பாஜு மெலாயு ஆண்களுக்கும் உருவாக்கப்பட்ட உடைகளாகும். பாஜு குரோங் தளர்வான சட்டையையும் தளர்வான நீண்ட பாவாடையையும் கொண்டது. கைகள் மற்ரும் முகத்தைத் தவிர உடல் முழுவதையும் உள்ளடக்கியதாகும் இவ்வுடை சொங்கெட், பாதிக் போன்ற துணிகளில் செய்யப்பட்டவை. மலாய் இனத்தவர்கள் இவ்வுடையை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறார்கள். பாஜு மெலாயு உடையை ஆண்கள் விழா காலங்களிலும் வெள்ளிக்கிழமையன்று மசூதிக்குத் தொழுக செல்வதற்கும் அணிவார்கள்.

    சியோங் சாம் உடை சீனப் பெண்களின் பாரம்பரிய உடையாகும். இவ்வுடையை திருமணம் மற்றும் பெருநாள் காலங்களில் அணிவார்கள். சியோங் சாம் உடை பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சிவப்பு நிறம் சீனர்களுக்கு மிகவும் உகந்த மற்றும் சிறப்பைத் தரும் வண்ணமாகக் கருதப்படுகிறது. நீண்ட கழுத்தையும் தோல்பட்டையில் பொத்தான்களுமான இவ்வுடை அனைவருக்கும் பிடித்த உடையாகத் திகழ்கின்றது. சாம்பு எனும் உடை சீன ஆண்களின் உடையாகும். மிருதுவான சில்க் துணியில் செய்யப்பட்ட இவ்வுடையைப் பெருநாள் காலங்களிலும் விழாக் காலங்களிலும் அணிவார்கள்.

    இந்தியர்களின் பாரம்பரிய உடையானது சேலை, வேட்டி மற்றும் ஜிப்பாவாகும். சேலை பெண்களுக்கும் வேட்டி ஜிப்பா ஆண்களுக்கும் உரிய உடையாகும். வேட்டி வெள்ளை நிற துணியில் தயாரிக்கப் பட்டதாகும். வேட்டி மற்றும் ஜிப்பா எனும் சட்டையை இந்திய ஆண்கள் சமய நிகழ்வுகளிலும் விழா காலங்களிலும் அணிவர். சேலை எனும் பெண்களின் உடை பண்டிகை காலத்தில் அணியப்படுகிறது. சேலைகளில் பல வகையும் பல வண்ணங்களும் உண்டு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக