வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

உன்னால்தான் மலேசியா

மலேசியா பல்லின மக்கள் வாழும் அமைதிப் பூங்காவாக விளங்கும் அரிய நாடு.
எல்லா வகை வளங்களும் நிறைந்த நாடுதான் நம் மலேசியா. தேசிய தினச் சிறப்புச் செய்தியில் " நாட்டின் வலிமைக்கு எல்லோரும் இணைவீர்!" என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவையாகும்.

          உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும், அரசியல் நிலைத்தன்மையும், பல்லின மக்களின் ஒற்றுமையும், சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
    மலாய் இந்தியர், சீனர், கடசான், டூசூன் போன்ற பல்லின மக்கள் யாவரும் கலை பண்பாடு, சமயம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி வருகின்றனர். பல இனங்களிடையே நிலவும் நல்ல உறவும் ஒற்றுமையும் மலேசியாவை உலக அரங்கில் நிமிர வைத்துள்ளது.. மக்களின் இனிய பண்பையும் ஒற்றுமைச் சிறப்பையும் குறிப்பிடுவதன் மூலம் நாட்டின் இயற்கை வளமும் மக்களின் உழைப்பும் போற்றப்படவேண்டிய ஒன்று என்று அறிய முடிகிறது.

         இதனைத் தொடர்ந்து பகைமை உணர்ச்சி நீங்கி தோழமை உணர்வுடன் மலேசிய மக்கள் வாழ்வதால் இப்புண்ணிய பூமி அமைதிப் பூங்காவாகத் திகழும். 'உன்னால்தான் மலேசியா' என்ற வாசகத்திற்குப் பொருள் கூறும் வண்ணம் மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்கிறார்கள். ஈன்றெடுத்த குழந்தை எத்தனை என்றாலும் குறைவின்றிப் பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய் போல, மக்கள் அமைதியாக வாழ்ந்து குடியேறினாலும் தன் நிலத்தின் வளங்களை வழங்கி அனைவரையும் வாழ வைக்கும் மலேசியா திகழ்கின்றது.

    தாய் நாட்டின் சிறப்புகளை எடுத்தியம்பும் அதே வேளையில் சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்க வேண்டும்.. தீவிரவாதம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை, உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் மலேசியாவின் பல்லின மக்கள் சுபிட்சமாய் வாழும் நிலை பெற்றதற்கு வேற்றுமைகளைக் களைந்த ஒற்றுமை உணர்வே என்பதனை நாம் உணர வேண்டும். இந்நிலை நீடிக்க வேண்டுமெனில் நாம் மற்றத்தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், இரத்தம் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களமாக இப்பூமி மாறக்கூடும். அப்பொழுது இத்தாய் மண்ணில் செழித்து நிற்கும் இயற்கை வளங்கள் பயனற்றுப்போகும். ஒவ்வொரு குடிமகனும் தன் தாய் மண்ணை நேசித்து அதன் உயர்வுக்குப் ப¡டுபட வேண்டும்.
மலேசியர் என பெருமை கொள்வோம்!
உன்னால்தான் மலேசியா!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக