செவ்வாய், 2 செப்டம்பர், 2014

வாவாசான் பள்ளி

அரசாங்கம் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் வாவாசான் பள்ளி. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள வழியே இது.


    மாணவர்களிடையே ஒற்றுமை இருப்பது மிக முக்கியம் என்பதைக் கல்வி அமைச்சு கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, பல்லின மாணவர்களின் பாரம்பரிய பண்பாடுகளை நிலை நாட்டவும் அரசு நாட்டம் கொண்டுள்ளது. ஆகவே, வாவாசான் பள்ளி இவை அனைத்தையும் பூர்த்திச் செய்யும் என்ற எதிர்ப்பார்ப்புடன் எழுந்ததே வாவாசான் பள்ளி.




   வாவாசான் பள்ளியில் தேசியப் பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தமிழ்ப்பள்ளி ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும். இங்குப் பல்லின மாணவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவார்கள். அதுமட்டுமா, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவார்கள்.


    வாவாசான் பள்ளியில் எல்லா சமூக சமய மக்களின் உணவுகள் விற்கப்படும். தத்தம் சமயம், பண்பாட்டிற்கு ஏற்காத சில வகை உணவுகளும் இங்கு விற்கப்படுவதில்லை.

 
 அதுமட்டுமின்றி, மாணவர்கள் பல்லின மக்களின் கலாச்சரங்களையும் அறிந்து கொள்ள முடியும். வாவாசான் பள்ளியில் பல்லின கலாச்சார நடனங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஜொகெட், ஜப்பின், இணாங், பரதம், கோலாட்டம், விசிறி நடனம்  மற்றும் சிங்க நடனம் போன்றவை நம் நாட்டின் பாரம்பரிய நடனங்களாகும்.








    வாவாசான் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பண்பாடு வாரம் எனும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் பாரம்பரியப் பண்பாடுகளை மாணவர்கள் நடித்துக் காட்டுவார்கள். மலாய் மாணவர்களை ஜோகெட், இணாங் நடனங்களும், இந்திய மாணவர்கள் பரத நாட்டியம், கோலாட்டமும், சீன மாணவர்கள் சிங்க நடனம், விசிறி நடனமும் ஆடுவார்கள். இந்நிகழ்வுகளில் பல சுவரொட்டிகளும் தொங்கவிடப்படும். இச்சுவரொட்டிகள் பல்லின மக்களின் பாரம்பரிய பண்பாடுகளைச் சித்தரிக்கும்.
  
வாவாசான் பள்ளி மலேசியாவில் வாழும் பல்லின மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றால் அது உண்மையே. பிற சமூகப் பண்பாடுகளை மதிக்கும் சமுதாயமாகவும் குடிமகனாகவும் இப்பள்ளி மாற்றுகிறது.



    இத்திட்டம் நாட்டில் நிலவி வரும் சமூகச் சீர்கேடுகளையும் களைய உதவும். ஆகவே, ஒவ்வொரு பள்ளியும் வாவாசான் பள்ளியாக மாறினால், நம் நாட்டில் ஒற்றுமை பல்லினங்களுக்கிடையே அதிகமாகக் காணலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக