செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மலேசிய அதிசயம்– கண்ணாடிக் கோவில்

உலகில் கோவில்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது இப்போது துவங்கியதல்ல. அழகர்கோவில், காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட நிறைய கோவில்களில் கண்ணாடி அறைகள் உண்டு. இங்கு சுவாமி எழுந்தருளும்போது நாம் உள்ளே சென்றால், கடவுளுடன் நாமும் பல நூறு இடங்களில் பிரதிபலிப்போம். கடவுள் திரு உருவைச் சுற்றி பல கோணங்களில் பல கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால் நம் உருவம் நூற்றுக்கணக்கில்...

நமது தலைவர்களைப் போற்றுவோம்

துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ்  இவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பிப்ரவரி 8, 1903ஆம் ஆண்டு அலோர் ஸ்டார், கெடா மாநிலத்தில் பிறந்தவர். துங்கு அவர்கள் கெடா மாநிலத்தின் 24ஆவது மன்னரான சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா அவர்களின் புதல்வனாவார். இவரைச் சுதந்திரத் தந்தை என்போம். துங்கு அவர்கள் சட்டத் துறை பயின்றவர். இவர் மலாய்க்காரர்,...

சுதந்திரத் தின வருணனை

மலாயா கூட்டரசின் தலைநகரான கோலாலம்பூரின் சிலாங்கூர் கிளப் திடல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சியளித்தன. மக்கள் கூட்டம் அரங்கில் நிறைந்து காணப்பட்டது. அனைவரின் பார்வையும் இரண்டு கொடி கம்பங்களின் மீதும் அருகே உள்ளே மணிக் கூண்டின் மீதுமே உள்ளது. இன்று மலாயா கூட்டரசு...

மலேசியா பிறந்த கதை

1957ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 1963ஆம் ஆண்டு வரை மலாயாவை, மலாயா கூட்டமைப்பு என்று அழைத்தனர். அதற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மலாக்காவைக் கண்டு பிடித்த பரமேசுவரா காலத்தில் தீபகற்ப மலாயாவை, மலாயா...

ருக்குன் நெகாரா கோட்பாடு

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. மலாயா 1957இல் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர். நாடு நலம்பெறவும் மேலும் வலிமை பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத...

மலேசியர் அடைந்த நன்மைகள்

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்றும் கூட அழைக்கலாம். மலேசியா 1957இல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா தோற்றம் பெற்றதால் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவை பெரும் நன்மைகள் அடைந்தன.    மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர்தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கேச் சிறப்பைக் கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள்,...

தாய் மண்ணைக் காப்போம்

அன்னை மலையகமே! அகிலத்தின் ஓர்துளியே!                ஆழிசூழ் உலகினிலே அழகுமீன் வடிவமொடுஇன்னல் களைந்தே ஈட்டுகின்ற ஆட்சிமுறை                மின்னலின் வேகத்தில் மீட்டுகின்ற முன்னேற்றம்!இன்பத்தின் எல்லையிலே இனம்பாரா ஒற்றுமையும்                இணைந்திருக்கும் மூவினத்தின் எடுப்பான உழைப்புமுறை!துன்பத்தின்...

வாவாசான் பள்ளி

அரசாங்கம் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் வாவாசான் பள்ளி. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள வழியே இது.    மாணவர்களிடையே ஒற்றுமை இருப்பது மிக முக்கியம் என்பதைக் கல்வி அமைச்சு கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, பல்லின மாணவர்களின் பாரம்பரிய பண்பாடுகளை நிலை நாட்டவும் அரசு நாட்டம்...

குடும்பம் ஒரு கோவில்

வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவது குடும்பம். குடும்பம் ஒரு கோவில் என்றனர் நமது முன்னோர். கோவிலைச் சுற்றியே இந்தியச் சமூகம் நெடுங்காலமாக அமைந்து வந்திருக்கிறது. சமூகத்தின் ஆணி வேர் குடும்பம் என்பதால் அது கோவில் என அழைக்கப்படும் தகுதி உடையது. சமுதாயத்தின் அடிப்படையே குடும்பம்தான். பிள்ளைகளுக்கு வீடுதான் முதல் பள்ளிக்கூடம், பெற்றோரே முதல் ஆசான்கள். ஒரு தனி...

நல்லெண்ண விருந்து

மலேசியாவில் பண்டிகையின் போது நல்லெண்ண விருந்து நிகழ்வினை ஆங்காங்கே நடத்துவது பழக்கமாகவிட்டது. குறிப்பாக ஹரிராயா, தீபாவளி, சீனப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் போன்ற மலேசியர்களின் முக்கிய பெருவிழாக்களின் போது ஆங்காங்கே நல்லெண்ணவிருந்து நடைபெற்று வருகிறது. நல்லெண்ண விருந்து என்பது பண்டிகையின் போது மற்ற இனத்தவர்களோடு இணைந்து கொண்டாடப்படும் விருந்துபசரிப்பு ஆகும். இரு பண்டிகைகளை இணைத்தும் நல்லெண்ண விருந்து கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக தீபாராயா (Deeparaya), கிறிஸ்மஸ் புத்தாண்டு...